ஜனாதிபதியை சந்தித்த ஜெய்சங்கர்!

Byadmin

Jun 20, 2024

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
இன்று (20) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை,  இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியின் கீழ் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு ஜெய்சங்கரின் முதல் விஜயம்   இது என்பது குறிப்பிடத்தக்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *