பஸால் நைஸர் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து வெற்றியுடன் ஓய்வு

Byadmin

Mar 31, 2024

றிகோல் இன்றும் எனது கண்­முன்னே வந்­து­கொண்டே இருக்­கி­றது. போட்­டி­யின்­போது எனக்கு பந்து கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தில் பங்­க­ளாதேஷ் கோல்­காப்­பாளர் 18 யார் எல்­லையில் இருப்­பதை கவ­னித்தேன். உட­ன­டி­யாக மின்னல் வேகத்தில் நான் பந்தை உயர்த்தி உதைத்து கோலினுள் புகச் செய்தேன். அதைத்தான் எனது வாழ்­நாளில் சிறந்த கோலாக கரு­து­கிறேன்’ என நினை­வு­கூர்ந்தார்.

அந்தப் போட்­டியை பங்­க­ளா­தேஷில் தொழில்­பு­ரியும் மற்றும் உயர்­கல்வி கற்கும் இலங்­கை­யர்­களில் 5000 பேர் கண்டு களித்­த­தா­கவும் அறியக் கிடைத்­தது.

வெளி­நா­டு­களில் உள்ள இலங்கை வம்­சா­வளி வீரர்கள் இலங்கை அணியில் இடம்­பெ­று­வது எந்­த­ளவு பலன்­தரும் எனக் கேட்­ட­போது,
‘இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் இப்­போ­துதான் சரி­யான திசையில் செல்­கி­றது. வெளி­நா­டு­களில் உள்ள இலங்கை வம்­சா­வ­ளி­யி­னரை இணைத்­துக்­கொண்டு விளை­யா­டு­வதன் மூலம் சர்­வ­தேச தர­வ­ரி­சையில் இலங்­கை­யினால் முன்­னேற முடியும். அவர்கள் வெளி­நா­டு­களில் வாழ்ந்­தாலும் அவர்கள் இலங்­கை­யர்­களே. அவர்­க­ளுடன் இணைந்து விளை­யா­டும்­போது இங்­குள்ள வீரர்­க­ளுக்கு சிறந்த அனு­பவம் கிடைப்­ப­துடன் நிறைய நுட்­பங்­களைக் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இதனைத் தொடர்ந்து கடைப்­பி­டித்தால் வெகு­விரைவில் இலங்கை கால்­பந்­தாட்டம் உலக தர­வ­ரி­சையில் முன்­னேறும் என நம்­பு­கிறேன்’ என்றார்.

சர்­வ­தேச கால்­பந்­தாட்­டத்­தி­லி­ருந்து வெற்­றி­யுடன் விடை­பெற்ற பஸா­லிடம் எதிர்­கால குறிக்­கோள் என்­ன­வென கேட்­ட­போது,
‘இன்னும் சில வரு­டங்கள் கழக மட்­டத்தில் விளை­யாட விரும்­பு­கிறேன். அதன் மூலம் எனது அனு­ப­வத்தை ஏனைய வீரர்­க­ளுடன் பகிர்ந்­து­கொண்டு அவர்­களை சிறந்த வீரர்­க­ளாக உயர்த்­துவேன்.

‘நான் பாணந்­து­றையில் கால்­பந்­தாட்டப் பயிற்­சி­யகம் ஒன்றை எனது வாப்பா, எனது இளைய சகோ­தரன் பாஹிர் நைஸர் ஆகி­யோ­ருடன் இணைந்து நடத்­து­கிறேன். பெரும் கஷ்­டத்­துக்கு மத்­தியில் பயிற்­சி­களில் ஈடு­படும் சிறு­வர்­களை சிறந்த வீரர்­க­ளாக தர­மு­யர்த்­து­வதே எமது குறிக்­கோ­ளாகும். எமது பயிற்­சி­ய­கத்தில் உரு­வாகும் சிறந்த வீரர்­களை ஸாஹிரா, ஹமீத் அல் ஹுசெய்னி ஆகிய கல்­லூ­ரி­களில் இணைத்துவருகிறோம். அது எமக்கு மன ஆறுதலையும் திருப்தியையும் தருகிறது’ எனக் கூறினார்.

பஸாலுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா, ‘பஸாலின் மனதை குளிரவைக்கும் வகையில் பிரியாவிடை வழங்கவேண்டும் என நாங்கள் எண்ணினோம். அவர் எப்போது களம் புகுவார் என நான் எதிர்பார்த்த வண்ணம் இருந்தேன். அவர் களம் புகுந்ததும் எனது சிரேஷ்ட வீரரான அவரை கௌரவிக்கும் வகையிலேயே தலைவருக்கான கைப்பட்டியை அவருக்கு அணிவித்தேன். அவரைப் போன்ற சிறந்த, பண்புள்ள வீரருக்கு இந்த பிரியாவிடை உகந்ததாகும்’ என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *