பொலிஸ் தலைமையகம் வௌியிட்ட புதிய பட்டியல்!

Byadmin

Feb 9, 2024

நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைத்துள்ளனர்.
17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை உதவியாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 53 கடத்தல்காரர்கள் மற்றும்  நாடளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 296 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது.  
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *