கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு!

Byadmin

Feb 9, 2024

கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
  நாளை (10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
 அம்பத்தல நீர் விநியோக திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *