பயிர்ச்செய்கை பாதிப்பு குறித்த மதிப்பீடு ஆரம்பம்

Byadmin

Jan 19, 2024

நிலவிய அதிக ம​ழை மற்றும் வௌ்ளப்பெருக்கால் பயிரிடப்பட்ட 61,000 ஏக்கர் நெற்பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, நெல் சேத மதிப்பீடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் தங்கொடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பால் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காணப்படும் மரக்கறி தட்டுப்பாடு எதிர்வரும் காலங்களில் முடிவுக்கு வந்தாலும், எதிர்வரும் ஜூன் மாதத்தின் போது மீண்டும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் சிறுபோகத்தில் வரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதால் மரக்கறி பற்றாக்குறையை சமாளிக்க உரிய வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *