இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியானது தனது திணைக்களத்திற்கு முதலாளி ஊடாக பெறப்படுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரிக் கொள்கை மற்றும் சட்டப்பிரிவின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நிஹால் விஜேவர்தன தெரிவித்தார்.
வாகனம் – காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்
