போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது

Byadmin

Dec 10, 2023

பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் வகுப்பு மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த தனியார் மருந்தக ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் தஹியாகம சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிம் இருந்து  685 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாத்திரைகள் வைத்தியர்களின் ஆலோசனைப்படி, நோயாளிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும், அந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் அது போதையை ஏற்படுத்தும் எனவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *