மாலைத்தீவு சென்றார் ஜனாதிபதி

ByEditor 2

Jul 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் சென்ற ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *