ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மில்லிமீற்றர் ரவைகள் 04 மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
41 வயதுடைய உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.