நிவிதிகல பகுதியில் நபரொருவர் படுகொலை

ByEditor 2

Jul 15, 2025

நிவிதிகல, தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 

கொழம்பகம, நிவிதிகலவைச் சேர்ந்த இவர், மூன்று பேருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *