பெற்ற மகளின் வாழ்வை சீரழித்த தந்தை

ByEditor 2

Jul 4, 2025

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தனது 16 வயதுடைய  மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாந்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய ஹதரவன கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கை​து செய்யப்பட்டுள்ளார்.

கைவிட்டு சென்ற தாய்

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை பாடசாலையின் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்திருந்ததோடு, ஆசிரியர் பொலிஸாரிடம் செய்த புகாரின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய், இரண்டு தங்கைகளின் மூத்த சகோதரி, ஆகியோரை சிறு வயதிலேயே கைவிட்டு சென்றுவிட்டார். சிறுமி, தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.

வீட்டில் தனியாக இருந்தபோது தனது தந்தை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக வகுப்பு ஆசிரியரிடம் சிறுமி தெரிவித்திருந்த நிலையில், அது குறித்து பொலிஸாரிடம் சிறுமி சியம்பலாண்டுவ பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியாம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *