இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்

ByEditor 2

Jun 23, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாட்டுக்குத் திரும்புவதற்காக 12 பேர் நேற்று இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்களும் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *