மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

ByEditor 2

Jun 18, 2025

வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர்மடத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் கெனக்அசான் (வயது 20) என்ற இளைஞர் ஆவார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (17) நண்பகல் மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *