45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாதனை

ByEditor 2

Jun 17, 2025

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை  குருத்தலாவ  பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக திங்கட்கிழமை(16) மாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை  வந்தடைந்தார்.

மருதமுனை  பகுதிக்கு 27 வது நாளில் வந்துள்ளதுடன் தனது ஊர் வெலிமடை  குருத்தலாவ என்றும் கரையோரங்களை தற்போது சுற்றி வருகை தந்துள்ளதாகவும் பொத்துவில் பகுதிக்கு சென்று பின்னர் பதுளைக்கு  சென்று மீண்டும் தனது ஊரை அடைவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

இன்னும் தனக்கு 17 நாட்கள் இருப்பதாகவும் 14 நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்தால் புதிய ஒரு சாதனை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *