இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமானிடம் ஈரான் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், போர்நிறுத்தம் எட்டப்படுவது சிக்கலான விடயம் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.