விபத்திற்கு பின்னர் மீண்டும் தோன்றிய சுமேதா யானை!

ByEditor 2

Jun 11, 2025

கடந்த மார்ச் மாதம் மரதன்கடவல பகுதியில் நடந்த விபத்தில் சிக்கி பின்னர் காணாமல் போயிருந்த சுமேதா என்ற யானை, மின்னேரியா தேசிய பூங்காவில் உள்ள பதுபொல பகுதியில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுற்றித் திரிவதை ஒரு பார்வையாளர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார். 

விபத்துக்குப் பிறகு சுமேதா யானைய ஒரு தந்தத்தை இழந்திருந்தது. 

இருப்பினும், இந்த காட்சிகளின்படி, ஒரு தந்தத்தை இழந்த பிறகு சுமேதா ஒரு தந்தத்துடன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொலன்னருவவை மாவட்டத்தில் உள்ள மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவில் சுமேதா யானை சுற்றித் திரிந்து, அவற்றை தனது வீடாக இருப்பிடமாக மாற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *