மனைவியை கொலை செய்த கணவன்

ByEditor 2

Jun 9, 2025

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 44 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *