சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை

ByEditor 2

Jun 3, 2025

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை பல்வேறு வகையான கரிம சீனியாக ஏற்றுமதி செய்வது குறித்து சீனா, ஈரான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று தெரிவித்தார்.

உலக சந்தையில் கரிம சீனிக்கு அதிக தேவை இருப்பதாகவும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியில் கரிம சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அவர், சீனித் தொழிற்சாலைகளின் வருவாயை உயர்த்துவதற்கான ஒரு வழி சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *