போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

ByEditor 2

May 31, 2025

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘மஹவெலேமுல்லே ஷான் சுத்தா’ என்றும் அழைக்கப்படும் சம்பத் குமார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது, சந்தேக நபர் பொலிஸாரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து, வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர், பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வைத்திருந்த பையொன்றில் இருந்து போதைப்பொருட்களையும் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *