கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை, இன்றுடன் முடிவடையும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள்
அதேவேளை, ஜூன் 2, 2025 முதல், ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள், காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | One Day Passport Service Closing Date
முன்பதிவு செய்தல் அல்லது அவசரத் தேவைகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் இந்த சேவையின் கீழ் வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வழக்கம் போல் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.