போதைப்பொருளுடன் சிறைச்சாலை காவலர் கைது

ByEditor 2

May 29, 2025

போதைப்பொருளுடன், பொரளை ​மெகசின் சிறைச்சாலைக்குள் நுழைய முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசர நடவடிக்கை முகாமைச் சேர்ந்தவராவர்.  

சந்தேக நபரிடமிருந்து  16,112 மில்லிகிராம் ஹெரோயின், 12,924 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 73,855 மில்லிகிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 சந்தேக நபர் சிறைச்சாலைக்குள் இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தாரா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *