நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில்துப்பாக்கிச்சூடு

ByEditor 2

May 29, 2025

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை, மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு சட்டப்பூர்வ உரிமம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பிரபலமான தொழிலதிபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *