555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு

ByEditor 2

May 22, 2025

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுனுவிலவில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

தென்னை முக்கோண வலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தேங்காயின் விலை சுமார் ரூ. 163 ஆக நிலையாக உள்ளது என்று தலைவர் மேலும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *