மனைவியை சுட்டு வீழ்த்திய கணவன்

ByEditor 2

May 16, 2025

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து கணவன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *