அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னுயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புச் சாவடிக்குள் பொலிஸ் கான்ஸ்டபிள் இறந்து கிடந்ததாகக் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்தவர் பிபிலையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
