நாட்டின் பல மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (ஏப்ரல் 30) இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும்.
மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.