இடியுடன் கூடிய மழை

ByEditor 2

Apr 26, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 
 
மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் புத்தளம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். 
 
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *