இரண்டாம் நாள் தபால்மூல வாக்களிப்பு

ByEditor 2

Apr 25, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அரச நிறுவனங்கள், பொலிஸார், முப்படையினர், பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல விண்ணப்பதாரர்களும் இந்நாட்களில் வாக்களிக்க முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *