நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.