இலங்கையில் விளையாட்டுத் துறையின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, நில அடிப்படையிலான சூதாட்ட விடுதிகள், கப்பல்களில் கடல்சார் விளையாட்டு, கொழும்பு துறைமுக நகரத்தில் விளையாட்டு மற்றும் ஒன்லைன் விளையாட்டு தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான அதிகாரங்களை முன்மொழியப்பட்ட அதிகாரசபை கொண்டிருக்கும்.
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரால் (AG) அங்கீகரிக்கப்பட்ட வரைவு மசோதா, 2025 பெப்ரவரி 24 அன்று வழங்கப்பட்ட அமைச்சரவை ஒப்புதலைப் பின்பற்றுகிறது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டம் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
