புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றிற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் போப் உலகில் ஓர் அழியாத முத்திரையை பதித்துள்ளார் என்று ஜனாதிபதியின் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
