காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

ByEditor 2

Apr 20, 2025

அநுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

இவர் இன்றைய தினம் அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற போது வீட்டிற்கு முன்பாக நின்றுகொண்டிருந்த காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் ஹொரவ்பொத்தானை மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *