தென்னை பயிர்களை சேதமாக்கிய காட்டு யானைகள்

ByEditor 2

Apr 19, 2025

வவுனியா வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளன.

குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை, சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக செல்கின்ற காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டப் பயிர்களை சேதமாக்குகின்றன.

குறித்த கிராமங்களுக்குள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த தென்னைபயிர்களை நாசமாக்கிச் சென்றுள்ளன.

கோரிக்கை 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், எமக்கான தீர்வை எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை முன்வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எமது கிராமத்தை சுற்றி யானை வேலியை அமைத்து தருமாறு பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *