இன்று இடியுடன் கூடிய மழை 

ByEditor 2

Apr 18, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
அத்துடன் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும். 
 
மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *