கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டிற்கான காரணம் (UPDATE)

ByEditor 2

Apr 8, 2025

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பிரதேசத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபரொருவர் அங்கிருந்த உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார்

பொலிஸார் சந்தேகம்

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *