பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

ByEditor 2

Apr 6, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று (6) தமிழகம் செல்ல உள்ளார்.

இலங்கை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்லவுள்ள நிலையில் குறித்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு சென்று பகல் 12.00 மணியளவில் புதிய பாம்பன் தொடருந்து பாலத்தை கொடி அசைத்து திறந்து வைக்கவுள்ளார்.

பாம்பன் சாலை பாலம்

தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து 12.30 மணியளவில் புறப்பட்டு நேராக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.

பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி! | Narendra Modi Open Pamban Railway Bridge

பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, இராமேஸ்வரம் – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.

அதுபோல இராமேஸ்வரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *