வீட்டை உடைத்து திருடிய பெண்கள்

ByEditor 2

Apr 4, 2025

மொரட்டுவ பொலிஸ்  பிரிவில் வீட்டை  உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பெண்களை பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.

கடந்த  மார்ச் 24 ஆம் திகதி சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து 639,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாக பொலிஸாருக்கு புகார் கிடைத்துள்ளது.

இதன்படி மொரட்டுவ பொலிஸ்  நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த மூன்று பெண்களும்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 33 மற்றும் 47 வயதுடைய கொரலவெல்ல மற்றும் மொரட்டுவெல்ல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட சில பொருட்கள் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன, மேலும் சம்பவம் குறித்து மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *