தென்னை, பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்

ByEditor 2

Apr 2, 2025

இலங்கையில் தென்னை மற்றும் பனைத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, விபத்து மரணம் மற்றும் காயங்கள் தற்றுத் எலும்பு முறிவுகளுக்கான காப்பீட்டுக் கொள்கையை வழங்க விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. 

இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படலாம் எனறும் குறிப்பிட்டுளுளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மரணம் அல்லது / அல்லது மொத்த நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.500,000, ரூ.1,000,000 அல்லது ரூ.2,000,000 காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். 

விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் போதும் குறித்த காப்பீடு தொகையை பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *