கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்

ByEditor 2

Mar 18, 2025

அநுராதபுரம் பிரதேசத்தில் 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 60 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *