சுமார் 4.5 ரூபாய் மில்லியன் மதிப்புள்ள, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற பயணி ஒருவர் சனிக்கிழமை (15) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது .
கைது செய்யப்பட்டவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரின் பயணப் பையில் இருந்து 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 150 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.