கொழும்பில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

ByEditor 2

Mar 15, 2025

கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

கொலைக்கான காரணம் வெளியாதா நிலையில்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை  நேற்றையதினம்  திருகோணமலையில் இரு பெண்கள் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் இன்று கொழும்பிலும்  இரு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *