பொது வைத்தியசாலை வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு

ByEditor 2

Mar 12, 2025

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய சங்க அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் 

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை நடவடிக்கைகள் சற்று ஸ்தம்பிதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எவ்வாறாயினும் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *