111 லேட்டஸ்ட் மொபைல் தொலைபேசிகளை கொண்டு வந்தவர் கட்டுநாயக்கவில் கைது

ByEditor 2

Mar 4, 2025

அதிநவீன கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்த  பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய வியாபாரி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபரின் 3 பயணப்பொதிகளில் சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான 111 விலையுயர்ந்த கையடக்கத்தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *