ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

ByEditor 2

Feb 28, 2025

செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

காயமடைந்தவர்களில்  ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்  கந்தேயாக, மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தநபர் 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *