ஹக்கீம், பிமல் மோதல்

Byadmin

Feb 27, 2025

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் வியாழக்கிழமை (27)  பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தன்னை நிதிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தன்னை நிதிக்குழுவில் இணைத்துக் கொள்ளவதாக உறுதியளித்திருந்தார் என சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்,

ஜனாதிபதி உறுதியளித்தும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், பிமல் ரத்நாயக்க அவரின் குற்றச்சாட்டையும் என்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *