நிந்தவூர் கடற்கரையில் மிதந்து வந்த தண்ணீர் தாங்கி

ByEditor 2

Feb 27, 2025

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில்   பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று புதன்கிழமை(26) மாலை  கரை ஒதுங்கியுள்ளது

கடலில் நிலவும் கடும் காற்றால் பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது

குறித்த பாரிய தண்ணீர் தாங்கி இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக் வர்ண  கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக இப்பொருள் பெரிய அளவில் காணப்படுகின்றது.

கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம் கடற்படை பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *