நீர் வீழ்ச்சியில் சடலம் மீட்பு

ByEditor 2

Feb 24, 2025

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் நீர் வீழ்ச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில், சுமார் நான்கு ஐந்து தினங்களுக்கு முன் இறந்த நபர் ஒருவரின் சடலம் எனவும் இறந்த நபர் பற்றிய விபரம் தெரியவில்லை என்றும் நாளை காலை சம்பவம் இடத்திற்கு நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *