அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு

ByEditor 2

Feb 13, 2025

இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் காரணம் காட்டியுள்ளது.

புதிய குழு விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதானி கிரீன் இலங்கையின் முதலீட்டு வாரியத்திற்கு (BOI) “மரியாதையுடன் விலகும்” முடிவைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அதானி குழுமத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை, அதே நேரத்தில் இலங்கையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *