50 புதிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம்

ByEditor 2

Feb 12, 2025

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கமைய பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 105 பேருக்கும், பொலிஸ் பரிசோதகர்கள் 34 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இடமாற்றங்களுக்கு அமைய, 50 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *