நாகை கப்பல்சேவை மீண்டும் ஆரம்பம்

ByEditor 2

Feb 10, 2025

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி  எதிர்வரும் புதன்கிழமை (12) காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலானது, பயணத்தை ஆரம்பிக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை  காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

மேலும்  இந்த கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *